tamilnadu

14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்தது...

சென்னை:
தமிழ்நாட்டில் 14 மாவட் டங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்தது.ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் நாடுமுழுவதும் இந்த ஆண்டு தொடக் கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. 1 லிட்டர் டீசல் விலை ரூ.98-ஐ தாண்டியது.தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து இதுவரை 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த் தப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளியன்று (ஜூன் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.88-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.89-க்கும் விற்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.கடலூர், தருமபுரி, கள்ளக் குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், இராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது.வேலூர் மாவட்டத்தில் வெள்ளியன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.60எனவும் பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் டீசல் 94.03 -க்கு விற்பனையானது.திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.84-க்கு விற்பனையானது. டீசல் ரூ.94.78 ஆக இருந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.40, டீசல் ரூ.94.01 ஆக இருந்தது.தருமபுரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெட் ரோல் ரூ.100.38-க்கு விற்கப் பட்டது. திண்டுக்கல் மாவட்டத் தில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு விலையில் விற்கப் படுகிறது. பழனியில் பெட்ரோல் விலை ரூ.100.11-க்கும், கொடைக் கானலில் ரூ.100.49-க்கும் விற்கப் படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.100.91, டீசல் விலை ரூ.94.84 ஆக விற் றது. விழுப்புரத்தில் பெட்ரோல் விலை ரூ.100.26, டீசல் விலை ரூ.94.22 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் நகர் பகுதியில் பெட்ரோல் விலை ரூ.100.76, டீசல் விலை ரூ.94.70 ஆக விற்பனையானது.

நீலகிரி மாவட்டத்தில் பெட் ரோல் ரூ.100.91-க்கும், டீசல் ரூ.94.62-க்கும் விற்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.99.68 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில பெட்ரோல் பங்குகளில் ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக விற்கப் படுகிறது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ள்ளாகி உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

;