சென்னை,மே 21-பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் மக்களும் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ண யித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் செவ்வாயன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.87 ஆக வும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.97 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு செவ்வாயன்றே அமலுக்கு வந்தது.