சென்னை எழும்பூர் கேசவன்பூங்கா பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரியத்தில் குடியிருந்த 864 குடும்பங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிசை மாற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளரிடம் மனு அளித்தனர். சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.முருகன், மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், கிளைச் செயலாளர்கள் ஈ. அன்பு, வி.சரவணன் ஆகியோர் உள்ளனர்.