tamilnadu

img

ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்றம்: எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? மு.க.ஸ்டாலின் கண்டனம்...

சென்னை:
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது:

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.  40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என  எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.தமிழகத்தில் அதிமுகவின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு,தனது தில்லி எஜமானர்களின் கால் பிடிக்கும்அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா? எதுவாக இருந்தாலும், மீண்டும் ‘‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’’ என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;