tamilnadu

img

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

தஞ்சாவூர், ஏப்.4-பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் 4 நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்றுதேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை 10 வார்டுகளில் 16 இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு மாதிரி வாக்குப்பதிவு செய்தனர். இதேபோல் அறந்தாங்கி சாலையில் உள்ள தனியார்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு, 100 சதவீத வாக்களிப்பு குறித்து விளக்கப்பட்டது. நிகழ்வில் 800 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் மாதிரி வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி தலைமையில், தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம் செய்திருந்தார்.

;