tamilnadu

img

மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்... சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்  

சென்னை:
பொதுமக்கள் திங்கட்கிழமை முதல் (ஜூலை 6) முதல்  கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். போரூரில் ஞாயிறன்று (ஜூலை 5) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கொரோனா விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது.  தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39,590 தெருக்களில் 9 ஆயிரம் தெருவில் பாதிப்பு இருந்த நிலையில் 8 ஆயிரமாக குறைந்துள்ளது.நோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

;