tamilnadu

மக்கள் குறிச்சியான கள்ளக்குறிச்சி: மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி, ஏப்.6-கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கௌதமசிகா மணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், கள்ளக்குறிச்சி இன்றைக்கு மக்கள்குறிச்சியாக மாறியிருக்கின்றது. நான் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் திரண்டிருக்கக்கூடிய எழுச்சியை காண்கின்றேன். என்ன காரணமென்றால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை அகற்றி விட வேண்டும். மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக இங்கு நீங்கள் திரண்டிருக்கிறீர்கள் என்றார்.இப்பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், ஐஜேகே மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால், மதிமுக மாவட்டச் செயலாளர் க.ஜெய்சங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;