உயர்கல்வியை பாதுகாக்க மக்கள் போராட்டம் கடலூரில் அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
உயர்கல்வியை பாதுகாக்க சட்டப் போராட்டம் மட்டுமல்லாது மக்கள் போராட்டம் நடத்தியும் தமிழக முதல மைச்சர் பாதுகாப்பார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கட லூரில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். கடலூர் வட்டத்தில் ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா ரெட்டிச்சாவடி தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த உயர்கல்வித்துறை அமைச்சர், பொதுமக்கள் அரசு அதிகாரிகளை தேடிச் செல்லும் நிலை மாறி தற்போது அதிகாரிகள் மக்களைத் தேடி சென்று மனுக்களை பெறுகின்றனர் என்றார். யுஜிசி வரைவு கொள்கையை பொறுத்தவரை கடந்த மாதம் இறுதி வரை அவகாசம் கேட்டு கருத்துகளை கூறலாம் என சொல்லி இருந்தனர். பாஜக ஆளும் மாநிலம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலத்திலும் உயர்கல்விக்கு இடையூறாக உள்ளதாக கூறி அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யுஜிசி கொள்கையை மக்கள் மன்றத்தில் எதிர்க்கிறோம், சட்டமன்றத்தில் எதிர்க்கிறோம், நீதி மன்றத்தில் எதிர்க்கிறோம். மேலும் சட்டப் போராட்டம், மக்கள் போராட்டம் நடத்தி உயர் கல்வியை பாதுகாப்பதில் முதல மைச்சர் கவனமாக இருக்கிறார் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்றும் அவர் கூறினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி வரவு ஆதாரங்கள் என்ன என்பது அனை வருக்கும் தெரியும். அரசு கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் வந்த போது பல்வேறு பிரச்சனைகள் இருந்தது அதை படிப்படி யாக நிவர்த்தி செய்து வருகிறோம் அதன்படி ஓய்வு பெற்றவர்களின் பண பலன்கள் தொடர்பான கோரிக்கைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார், இதே போன்ற முகம் குட்டியாங்குப்பம், கோண்டூர், வரக்கால்பட்டு, சுத்து குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்த முகாம்களில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.