tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

விழுப்புரம், ஜூன் 17-  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள நேமூர் கிராமத்தில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, ஒன்றியச் செய லாளர் ஆர்.கிருஷ்ணராஜ், கே.வீரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ண மூர்த்தி, வி.கிருஷ்ணராஜ், எஸ்.சித்ரா, அமுதா, பி.கலியமூர்த்தி, விதொச எஸ்.அபிமன்னன், கிளை செயலாளர் ஜெயசந்திரன், கிளை உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் செஞ்சி கடைவீதியில் வட்ட செயலாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி தலைமை யில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க த்தையும் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மாநில குழு உறுப்பினர் எஸ்.கீதா, விவசாய சங்க கே.மாதவன், ஏ.ஜே.பார்திபன், அங்கன்வாடி சங்க மலர்விழி, மின்சார சங்க கண்ணியப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் விழுப்புரம் வட்டக் குழு சார்பில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தொடங்கி வைத்து தொடக்க உரை யாற்றினார். இதில், மாவட்ட செயலாளர் என்.சுப்பிர மணியன், நகர செய லாளர்கள் எம்.மேகநாதன், எம்.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி, வட்ட குழு ராஜாராம், சேகர், ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரச்சார இயக்கம் விழுப்புரம், வழுதரெட்டி உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு முக்கிய வீதிகளின் வழி யாக சென்று மக்களை சந்தித்து நடைபெற்றது. வானூர்  வானூர் வட்டத்தில் உள்ள சிறுவை கிரா மத்தில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செய லாளர் என்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து உரை யாற்றினார். பிரச்சார இயக்கத்தில் வட்டச் செய லாளர் எஸ்.பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கே.முருகன், வட்டக் கழு உறுப்பினர்கள் ஆர்.விஸ்வநாதன், ஐ.சேகர், ஏ.அன்சாரி, கே.மாயவன், என்.அசுவத்தாமன், சிறுவை கிளை செயலாளர் எஸ்.வீரமணி, கிளை உறுப்பி னர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.