tamilnadu

img

அண்ணாமலை பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர் காலமானார்

அண்ணாமலை பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர் காலமானார்

சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணா மலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அனைத்து விதமான பயன்களையும், பண பலன்களையும் உடன டியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தொடர்ந்து 7-வது நாளாக இரவு பகல் பாராமல் பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கலியபெருமாள் என்ற ஓய்வூதியர் 6-வது நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் ஓய்வூதியர்கள் பலன் கிடைக்கவில்லை என்றும் போராட்டம்  குறித்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் செவ்வாயன்று காலை அவரது வீட்டில் உயிர் இழந்தார். இந்த தகவலை அறிந்த போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது படத்தை போராட்ட களத்தில் வைத்து மாலை அணிவித்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் எந்த இடர்பாடு வந்தாலும் தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறி வித்துள்ளனர்.