tamilnadu

கோயம்பேட்டில் பயணியிடம் நகை கொள்ளை

சென்னை,ஏப்.30-சென்னை தாண்டவராயன் பிள்ளை (டி.பி)சத்திரம் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் அருணா. இவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து அருணாவை பார்ப்பதற்காக அவரது மாமா சுந்தரம், அத்தை சரோஜா ஆகியோர் சென்னை வந்தனர்.பின்னர் திங்களன்று இரவு சொந்த ஊர் திரும்ப கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த சுந்தரம், சரோஜா இருவரும் போளூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த அவரது கைப்பை மாயமானது. அதிலிருந்த 10 சவரன் நகை, ஏ.டி.எம். கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை யாரோகொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து சுந்தரம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையரை தேடி வருகின்றனர்.

;