tamilnadu

img

கட்சிக் கல்வி நிரந்தரப் பள்ளி துவக்க விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் ‘கட்சிக் கல்விக்கான நிரந்தரப் பள்ளி’ அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் முதல் வகுப்பை இணைய வழியில் துவக்கி வைத்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். பள்ளியின் நோக்கம் குறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். இளம் மாணவர்கள் ஏராளமானோர் வகுப்பில் கலந்துகொண்டனர்.