tamilnadu

img

நளினியின் பரோல்   மேலும் 3 வாரங்கள் நீட்டிப்பு

 சென்னை, ஆக. 22 - நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்கி கடந்த ஜூலை 5ல் உத்தர விட்டது. இதன் பின்னர் சிறைத்துறை நிர்வாக நடவ டிக்கைகளுக்கு பின்னர் நளினி கடந்த ஜூலை 25 அன்று  30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்த காலக்கெடு  இம்மாதம் 25ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை முடிக்க  முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்  கோரி வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் நளினி அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, தனக்கு மேலும் 30 நாள்கள் பரோல் வழங்க உத்தர விடக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, ஆக.25 ஆம் தேதி  முதல் மேலும் 3 வாரத்திற்கு பரோல் வழங்கி உத்தர விட்டனர்.