tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று  முதல் சென்ட்ரலில்  இருந்து இயக்கம்! சென்னை, ஜூன் 8- சென்னை – புதுதில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் ( ஜி.டி.,) விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படவுள்ளது.  சென்னை ரயில் கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – புதுதில்லி இடையே இயக்கப்பட்டு வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் (12615), கடந்த ஆண்டு மே 9 முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்றதால், மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.  பின்னர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு கிராண்ட் டிரங்க் ரயில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ரயில் திங்கட்கிழமை (9-ம் தேதி) முதல் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து புதுதில்லிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ஜி.டி. ரயில் 3-வது நாள் அதிகாலை 5 மணிக்கு புதுதில்லியை சென்றடையும். மறுமார்க்கத்தில், புதுடெல்லியில் இருந்து மாலை 4.10 புறப்படும் இந்த ரயில் (12616), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 3-வது நாள் அதிகாலை 4.45 மணிக்கு வந்தடையும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும் 12–ந் தேதியும்  17 மின்சார ரயில்கள் ரத்து சென்னை, ஜூன் 8- சென்னையிலிருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே திங்கட்கிழமை மற்றும் ஜூன் 12 ஆகிய தேதி களில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய வணிக வளாகங்களில்   அதிகரிக்கும் பார்க்கிங் கட்டணம்!

சென்னை, ஜூன் 8- சென்னையில் திரையரங்குகளில் தின்பண்டங்களின் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, வாகன நிறுத்துமிட கட்டணமும் மக்களை வாட்டி வதைக்கிறது. தில்லி, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் குறைந்த கட்டணமோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்டணமோ வசூலிக்கப்படும் நிலையில், சென்னையில் மட்டும் முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.80 மற்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.40 என அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து நுகர்வோர் மன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. “இப்போதைய கட்டணம் இரண்டு மணி நேரத்திற்கு ரூ.100, ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் ரூ.90. பெரும்பாலான திரைப்படங்கள் நீண்ட நேரம் ஓடுகின்றன, மேலும் நான் அடிக்கடி செல்லும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 30 நிமிடங்கள் வரை தாமதமாக காட்சிகள் திரையிடப்படுகின்றன. பார்க்கிங்கிற்காக மட்டும் ரூ200 அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இது ஒரு திரைப்பட டிக்கெட்டின் விலைக்கு ஏறக்குறைய சமம்”  என அம்மால்களுக்கு செல்லும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வி. அருண் குமார் என்பவர் ஒரு வணிக வளாகம் தனது இரு சக்கர வாகனத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு ரூ.80 வசூலித்தது குறித்து நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்றம், இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று கூறியது. சட்டப்பூர்வத்தை தாண்டி, இது நியாயமான பிரச்சனையாகும் என்று பலர் கூறுகின்றனர். துபாய் போன்ற இடங்களில், வணிக வளா கங்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை இலவச பார்க்கிங் வழங்குகின்றன. தவறாக பயன்படுத்துவது குறித்து கவலை இருந்தால், பில்களை சரிபார்த்து இலவச பார்க்கிங் வழங்கலாம் என்று சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். . மக்கள் அதிருப்தி சென்னையில் பார்க்கிங் கட்டணம் அதிக மாக இருப்பது குறித்து பலரும் அதிருப்தி தெரி வித்துள்ளனர். இது தொடர்பாக நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விரைவில் மக்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.