tamilnadu

img

லாக்கப் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் மனு

கடலூர், ஜூலை 16- காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள உருத்திர சோலை கிராமத்தைச் சேர்ந்த வர் வினோத் (25). சந்தே கத்தின் பேரில் விசார ணைக்காக காட்டுமன்னார் கோயில் காவல் நிலைத் திற்கு கடந்த 10ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார்.  அடுத்த நாள் தான் கட்டி யிருந்த வேட்டியால் காவல் நிலையத்திற்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக  காவல்  துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக வினோத்தின் தந்தை ரா. மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், காட்டு மன்னார் கோயில் வட்டச் செயலாளர் பிரகாஷ், வழக்க றிஞர் லெனின் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  மனுவில், காவல் நிலை யத்தில் இரவு முழுவதும்  சித்திரவதை செய்யப்பட்ட தால்தான் வினோத் இறந்  தார். எனவே, அவரது மரணத்  திற்கு நீதி வேண்டும். அடித்  துக் கொலை செய்த காவ லர்கள் மீது உரிய விசாரணை  நடத்தி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களது குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்  பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண் டும் என்று மனுவில் தெரி வித்துள்ளார்.