சென்னை, ஜூன் 18- சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளி பரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவுக்கு காவல்துறையினர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை ஆபாச மாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பான யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நீண்ட காலமாக சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரு சம்பவத்துக்கு பல வழக்குகளை போலீஸ் உள்நோக்க த்துடன் பதிவு செய்துள்ளனர். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளையும், ஆதாரங் களையும் கலைக்க மாட்டேன்” என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.