tamilnadu

சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்த உத்தரவு

சென்னை, ஆக. 19 - வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்  களிலிருந்து சென்னைக்கு வருவோரை தனிமைப்  படுத்தப்படுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி 7, 8, 10, 11 மற்றும் 13 ஆகிய  மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகூட்டம் நடைபெற்றது. அதில் ஹர்மந்தர் சிங் பேசியதாவது: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த பயண அனுமதி (இ-பாஸ்) எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை நோக்கி வருவோர் எண்ணிக்கை அதி கரிக்கும். குறிப்பாக, ஆக.18 அன்று மட்டும் 18 ஆயி ரத்து 823 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயண அனுமதி பெற்று வருவோரை தனி மைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிர மாக மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலை மற்றும்  இதர அலுவலங்க பணிக்காக வருவோரை, தனி மைப்படுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ள இடங்களில் விதிகளை பின்பற்றாத நபர்கள்,  வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மீது காவல் துறையோடு இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.