tamilnadu

img

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னேரியில் சனிக்கிழமையன்று (ஜூலை 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.காளமேகம் தலைமை தாங்கினார்.இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், டி.மதன் உட்பட்ட பலர் பேசினர்.