சென்னை, டிச. 11- கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்த வேண் டும். மாறாக பொறியியல் படித்தவர் களை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் விடுத் துள்ள அறிக்கை: பொறியியல் பட்டம் பெற்றவர் கள் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணக்குப் பாட ஆசிரியராக வகை செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 35 ஆயிரம் பேர் காத்திருக்கின்ற னர். இந்நிலையில் அரசு வெளியிட் டுள்ள அரசாணை வேடிக்கையாக வும், வேதனையாக உள்ளது. பொறியியல் படிப்பு முடித்து ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வேலை யில்லாமல் உள்ளனர். பி.எட் படித்து வேலையில்லாமல் 4 லட்சம் பேரும், பி.எட் (டெட்) தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக 35 ஆயிரம் பேரும் காத்திருக்கின்றனர். பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்ஏ, பிஏ போன்ற பட்டப் படிப்புகளில் கணி தம், இயற்பியல், வேதியியல், உயிரி யல், பொருளியல் பாடங்களும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் படித்தவர்கள் பி.எட் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால்தான் ஆசிரியராக முடியும். இந்நிலையில் பிஎட் படிப்பில் தமிழக அரசு 2015 ஆகஸ்ட் மாதம் சில மாற்றங்களை செய்தது. அதன் படி, பிஎட் படிப்பு இரண்டு ஆண்டு களாக மாற்றப்பட்டது. பி.இ படித்த வர்களும் பி.எட். படிக்கலாம் என்று அறிவித்தது. பொறியியல் வகுப்பில் படித்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக் கல், சிவில் போன்ற பாடப் பிரிவுகள் பள்ளிகளில் கிடையாது. ஆகவே, பொறியியல் படித்தவர்களை எப்படி ஆசிரியர் பணியில் சேர்க்க முடியும்? இவர்களுக்கு ஏற்றார்போல் பாடத் திட்டம் மாறுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். தற்போது அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி, பி.இ, பிஎஸ்சி படித் தவர்களுக்கு சமநிலை அந்தஸ்தை வழங்கியுள்ளது. 4 ஆண்டுகாலம் பி.இ., படித்தவர்கள் மேலும் இரண்டு ஆண்டுகாலம் பி.எட். படித்து, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக வரவேண்டும். பொறியியல் படித்தவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. மாறாக, பி.இ. படிப்பும், பிஎஸ்சி படிப்பும் சமம் என்று அறி வித்திருப்பது சரியா? பிஎஸ்சி-க்கு கணக்கு அடிப்படையான பாடம். பி.இ-க்கு கணக்கு ஒரு படம் தானே தவிர, கணக்கு அடிப்படையான பாடம் இல்லை. எனவே, பொறியியல் முடித்தவர்களின் படிப்புக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். ஏற்கனவே, அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் வருடம் தோறும் வழங்கி வரும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான இடமாறுதல் கலந் தாய்வு இந்த முறை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனை வருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக் கான முழு கல்வித்தகுதி இருந்தும் அவர்களை பட்டதாரியாக பதவி உயர்வு வழங்காமல் நான்கு ஆண்டு களாக அரசு ஏமாற்றி வருகிறது. எனவே, அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ப பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.