சென்னை, ஜூன் 16- அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலை யம் என்ற வகையில் காவல்துறை சார்பில் புதிதாக 20 இடங்களில் அமைக் கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று(ஜூன் 16) திறந்துவைத்தார். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர். அதன்படி தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலை யங்கள் செயல்படுகின்றன. 2021-22ஆம் ஆண்டு காவல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புக் கிணங்க சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசர வாக்கம், தாம்பரம் மாநகரம் – சேலை யூர், ஆவடி மாநகரம் எஸ்ஆர்எம்சி., தாம்பரம் மாநகரம் – வண்டலூர், வேலூர் மாவட்டம் – காட்பாடி, திருவண்ணா மலை மாவட்டம் – திருவண்ணாமலை ஊரகம், கடலூர் மாவட்டம் – திட்டக்குடி. கரூர் மாவட்டம் – கரூர் ஊரகம், புதுக்கோட்டை மாவட்டம் – கோட்டை பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை. கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் – ஊமச்சிக்குளம், திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊரகம், தேனி மாவட்டம் – பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூர், திரு நெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் – புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.