tamilnadu

img

கடலூரில் ‘வி ஸ்கொயர்’ மால் திறப்பு

கடலூர்,செப்.1- கடலூர் பாரதி சாலையில் வள்ளி விலாஸ் குடும்பத் தின் ‘வி ஸ்கொயர்’புதிய மால் புதன்கிழமை (நவ.1) திறக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக கட்டப்பட்டுள்ள வி. ஸ்கொயர் மால் 3  தளங்களில் கார் நிறுத்தும் வசதி உள்ளது. மூன்று பிரமாண்டமான திரை யரங்குகள் கொண்ட பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் சினி மாஸ், கேஎஃப்சி, ரிலை யன்ஸ், டிரெண்ட்ஸ், புட் பிரிண்ட்,  இந்தியன் டிரெ யின், மா கார்மெண்ட்ஸ், கிட்ஸ் வேர்ல்ட், யுவானி கார்மெண்ட்ஸ், என பல்வேறு ஷாப்பிங் கடை கள் மற்றும் ஃபுட் கோர்ட் உள்ளது. மால் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக பொரு ளாளர் எம்.ஆர்.கே. கல்வி குழும இயக்குநருமான எம்.ஆர். கே.பி.கதிரவன் திறந்து வைத்தார். இந்த விழாவில் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கோ. ஐயப்பன், மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச் செல்வன், திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா,  மலர்ச்சி நிறுவனர் பரமன் பச்சைமுத்து, சுப வள்ளி விலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணேசன், மாலா கணேசன், பாடலில் சங்கர், உமா சங்கர், சகு ந்தலா, சுப்புராயன், பானு மதி மோகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தனர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.கருப்பையன், பாமக மாவட்டச் செய லாளர் சன்.முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வி ஸ்கொயர் மால் உரிமை யாளர்கள் எம்.ரமேஷ், ஆர். அனிதா ரமேஷ், மற்றும் சரவணன், ஸ்வர்ணமால்யா சரவணன், லக்ஷ்ண மாலியா, அச்சுதா, ஆதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.