தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 28ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் எறும்பூர், மழுவங்கரணை, தேசூர், கீழ் குவளை வேடு உள்ளிட்ட கிராமங்களில் பெயர் பலகை திறப்பு விழாவும், கொடியேற்று நிகழ்ச்சியும் மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், நிர்வாகிகள் என்.ராதாகிருஷ்ணன், பெ.அரிதாசு, டி.கே.வெங்கடேசன், ஜா.வே.சிவராமன், அப்துல்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.