tamilnadu

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைன் பதிவு

சென்னை, ஜூலை 18- தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள்  மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு  மாணவர்கள் திங்கள் முதல் (ஜூலை 20) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடந்த 16 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து உயர் கல்வி  சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கி யுள்ள நிலையில், தற்போது கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு திங்கள் முதல் தொடங்கு கிறது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் 109 கலை அறிவி யல் கல்லூரிகள் மற்றும் 139 அரசு நிதி உதவி பெறும் கலை  அறிவியல் கல்லூரிகள், 571 தனியார் கலை அறிவியல் கல்லூரி கள் ஆகியவற்றில் சேர்வதற்கு ஜூலை 20 முதல் 31ந் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கக் கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரி இணையதளம் வழியாக மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு கல்லூரிகளை பொருத்த வரை, அரசின் இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்  பிக்கலாம்.

;