வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு!
சென்னை, ஜூன் 10- சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்கா ளியை தொடர்ந்து வெங் காயத்தின் விலையும் அதிகரித்து வருகிறது.
வழக்கமாக தினசரி 45 லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயம் கடந்த சில நாட்களாக 30 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனை யில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதி கரித்து கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத் தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு நடைபெற்று வரும் வெங்கா யம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் வெங்கா யம் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.46-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய் கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்பில் அரசின் திட்டங்கள்
சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துக் கொள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையின் புதிய முன்னெ டுப்பாக ‘கட்செவி’ (வாட் ஆப்ஸ்) சேனல் தொடங்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறை வேற்றி வருகிறது.
பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடைய துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் Facebook, Instagram, Twitter, மற்றும் Youtube போன்ற வற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் ”TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங் கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ்க் கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்ய வும்.
மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டு ள்ள துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்திருக்கிறது.