tamilnadu

img

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் தற்கொலை!

சென்னை அருகே உள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் (36 வயது), ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த நிலையில், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.  ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு நீண்ட நாட்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், சென்னை அருகே உள்ள மாடம்பாக்கத்தில், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த வினோத்குமார் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மன உளைச்சலில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்குமார் பல்வேறு கடன் செயலிகளில் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டதும், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்து கடன் நெருக்கடிக்கு உள்ளாகியதும் தெரியவந்துள்ளது.