புதுச்சேரி, ஜூன் 24- புதுவை பிரதேசத்தில் நூறு நாள் வேலை திட்டத்தை உடனே துவங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விவசாயத் தொழி லாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நூறு நாள் வேலைத் திட்டத்தில் விண் ணப்பித்த அனைவருக்கும் உடனே வேலை வழங்க வேண்டும். நாளொன்றுக்கு நிர்ணயம் செய்த சட்டக்கூலி ரூ.229 குறைக்காமல் வழங்க வேண்டும். வேலை கேட்டு விண் ணப்பித்தவர்களுக்கு புதிய வேலை அட்டை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி வில்லி யனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க புதுவை பிரதேசத் தலைவர் உலக நாதன் தலைமை தாங்கினார். சங்கத்தின் தமிழ் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி துவக்கி வைத்து பேசினார். சங்க நிர்வாகிகள் கலிவரதன், மணி பாலன், முனியாண்டி ,ராமமூர்த்தி, விநாய கம், இன்னரசு ,வைரக்கண்ணு, மற்றும் சிபிஎம் கொம்யூன் செயலாளர்கள் ஐயப்பன், அன்பு மணி உள்ளிட்ட திரளான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அதி காரி நடத்திய பேச்சுவார்த் தையில் ஓரிரு தினங்களில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.