tamilnadu

img

வார விடுப்பு நாளிலும் பணி செய்ய நிர்ப்பந்தம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை, பிப். 5- வார விடுப்பு நாளிலும் பணி செய்ய நிர்ப்பந்திக்கும் காஞ்சிபுரம் மண்டலம், தாம்ப ரம் பணிமனை நிர்வாகத்தை கண்டித்து புத னன்று (பிப்.5) ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புறநகர் பேருந்துகளில் 550 கிமீ தூரம்  பேருந்தை இயக்கினால் இரண்டு வருகைப் பதிவு கொடுக்கப்பட்டு வந்ததை மாற்றி, 600 கிமீ இயக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வார  விடுப்பை பறிக்கும் வகையில் விடுப்பு நாளில்  மிரட்டி ஊழியர்களை பணி செய்ய நிர்ப்  பந்திக்கின்றனர். வசூல் குறைவை காரணம் காட்டி, பணத்தை வாங்காமல் அதிகாரிகள் பல மணி நேரம் தொழிலாளர்களை அலை கழிக்கின்றனர் என்று கூறி தாம்பரம் பணி மனை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரி மத்தை அதிகாரிகள் பறித்துக்கொண்டு பணி  வழங்க மறுப்பதற்கும், பொருந்தாத காரணங்  களை கூறி பதவியிறக்கம் செய்வதற்கும் கண்  டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் தொழிலா ளர்கள் முழக்கங்களை எழுப்பினர். பேருந்துகளுக்கு புதிய உதிரி பாகங்  களை கொள்முதல் செய்ய வேண்டும், பரா மரிப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும், தாம்பரம் பணிமனை வளாகத்தை சீரமைக்க  வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை யும் முழக்கங்கள் வாயிலாக வலியுறுத்தினர். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் - விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம், தாம்பரம் பணிமனையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்திற்கு கே. சீனுவா சன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மண்டல பெதுச் செயலாளர் என். நந்தகோ பால், துணைத்தலைவர்கள் பி. ரமேஷ், கோவ லன், துணைப் பொதுச் செயலாளர் வி. சிவ லிங்கம், இணைச் செயலாளர்கள் ஏ. பால சுப்பிரமணி, சி.சுரேஷ், அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜி.செந்தில் உள்ளிட்டோர் பேசினர்.