கிருஷ்ணகிரி,ஜூன் 19 - ஊத்தங்கரை இலக்கம்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமணம் மண்டபம் கட்டுவதற்கு துறை சார்ந்த மாவட்ட அலுவலர் நிலத்தை பார்வையிட்டார்.
இலக்கம்பட்டியில் திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும் என சிபிஎம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினரும், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான வி.கோவிந்தசாமி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் மனுக்கள் கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் திருமணம் மண்டபவம் கட்டுவதற்கான ஆய்வு ஊத்தங்கரை அதிகாரிகள் முன்னிலையில் புதனன்று நடைபெற்றது.