சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் ரூ. 8 ஆயிரத்து 835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 28 ஆம் தேதியன்று தொடங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்தார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 10 ஆம் தேதி சென்னை திரும்பினார்.இந்த நிலையில், முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடு தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் 27 நிறுவனங்களு டன் ரூ. 5 ஆயிரத்து 85 கோடி, துபாயில் 6 நிறுவனங்களுடன் ரூ. 3 ஆயிரத்து 750 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில்ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மொத்தமாக 41 நிறுவனங்களுடன் ரூ. 8 ஆயிரத்து 835 கோடி முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.