tamilnadu

img

பழையனூர் கிராமத்தில் பழைய மண்பாண்டங்கள் கண்டெடுப்பு

திருவள்ளூர், மே 25-  திருவள்ளூர் அருகே பழையனூரில் பழங்கால மண் பாண்டங்கள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம்  திருவாலங்காடு ஒன்றியம்  பழையனூர் ஊராட்சியில் உள்ள புற்று ஏரியில் கோயில் கட்ட ஞாயிறன்று (மே 24) மண் தோண்டினர்.  மண் எடுத்த அந்த பள்ளத்தில் பழங்கால பொருட்கள் தென்பட்டுள்ளது. இதனை அறிந்த அக் கிராம இளைஞர்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் மேலும் தேடுதல் பணியில்  ஈடுபட்டு, பழங்கால பொருட்களான மண்பாண் டங்கள் மற்றும் தண்ணீர் குவளைகளை சேகரித்தனர்.  கண்டெடுக்கப்பட்ட அந்த  பொருட்களை பழையனூ ரில் உள்ள இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செல்வம் தன் வீட்டில் வைத்து பரா மரித்து வருகிறார். இந்த பழங்கால பொருட்  கள்கிடைத்துள்ளது தொடர் பாக வட்டாட்சியருக்கும், கிராம நிர்வாக அலுவல ருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த பழங்கால பொருட்களை சுற்றுவட்டார கிராம மக்கள்  வந்து ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.