12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப்பெறப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மே 1 அன்று முதலமைச்சர் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மசோதா வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.