tamilnadu

தோழர் கே.தங்கவேல் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்....

சென்னை:
தோழர் கே.தங்கவேல் மறைவுக்கு அதிமுகஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்

அவர் தமது டிவிட்டர் பதிவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கே.தங்கவேல் அவர்கள் இன்று காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.தொழில் துறையினர் சார்பில், ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவர் ஏ.சக்திவேல், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) பொதுச் செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, நிட்மா தலைவர் அகில் சு.ரத்தினசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

சிபிஐ (எம்எல்-விடுதலை)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( எம்எல்-விடுதலை) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: ஒப்பற்ற தோழர் தங்கவேல் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் தோழர்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.   தோழர் தங்கவேலுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்கிகொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;