tamilnadu

குழந்தைப்பருவத்தில் சத்தான உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்தல்

சென்னை,பிப்.19- குழந்தைப் பருவம் துரிதமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான  ஒரு முக்கியமான பருவம் என்பதால் அதற்கேற்ப சத்தான உணவுகளை தேர்வு செய்து பெற்றோர்கள் வழங்க வேண்டும் என்றும் பிரபல மருத்துவர் பிரியா சந்திரசேகர் கூறினார். குழந்தைகளின் வளர்ச்சி குறித்து குரோ ரைட் கில்டு என்ற அமைப்பை அபாட்  நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இது ஊட்டச் சத்து, விளையாட்டு, செறிவூட்டல் மற்றும் தாக்கம் ஆகிய நான்கு முக்கிய வளர்ச்சிக் காரணிகளின் அடிப்படையில், சரியான வளர்ச்சிக்கான வழிமுறைகள் பட்டியலை உருவாக்கியுள்ளது. இதனை சென்னையில் வெளியிட்டு பேசிய அவர், குழந்தைப் பரு வத்தின் அடித்தள ஆண்டுகளில் அவற்றின் முன்னேற்றங்கள் கவனமாகவும் மற்றும் முழுமையாகவும் கையாளப்பட வேண்டும் என்றார். இரண்டு வயதிலிருந்து, பதின்பரு வத்தில் வளர்ச்சியை எட்டும் வரை, ஒரு குழந்தைகளின் சராசரி வளர்ச்சியானது தோராயமான உயரத்தில் ஆண்டிற்கு 6-8 செமீ  ஆகவும் மற்றும் எடையில் 2 கிகி ஆகவும் திகழும். எனினும், ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமிக்க வளர்ச்சி வேகத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  குரோ ரைட் கில்ட் அமைப்பின் சரியான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள், பெற்றோர் குழந்தைகளின் உணவு வேளைகளை சிறப்பான மேலாண்மை செய்வதையும் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஒரு  முழுமையான மற்றும் சமர்ச்சீர் உணவுமுறை கிடைக்கப்பெறுவதையும் உறுதி செய்கிறது என்று  அபாட்   குழந்தைகள் ஊட்டச்சத்து பிரவின் தலைவர், மருத்துவர்.இர்ஃபான் ஷேக் கூறினார்.