tamilnadu

img

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நாளை முற்றுகை போராட்டம்...

சென்னை:
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்ட வஞ்சக அரசாணையை மாற்ற, வாழ்வாதார பென்சன் ரூபாய் 7850ஐ அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி பிப்ரவரி 10 புதன் காலை 11 மணிக்கு சென்னையில் சமூகநல இயக்கக இயக்குநர் அலுவலகத்தை (சைதாப்பேட்டை பனகல் மாளிகை) மாநில முழுவதும் இருந்து ஓய்வூதியர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் ந.நாராயணன் தலைமை தாங்குகிறார். மாநில பொது செயலாளர் இ.மாயமலை கோரிக்கை விளக்கவுரையாற்றுகிறார். தமிழ்நாடு அரசு அனைத்துத்
துறை ஓய்வூதியர் சங்கத்தின்  மாநில பொது செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரையாற்றுகிறார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.நூர்ஜஹான், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்ஸி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். சங்கத்தின் மாநில பொருளாளர் ஜி.ஆனந்தவல்லி நன்றி  கூறுகிறார்.

;