tamilnadu

img

சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் எம்.கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பாடல் ஒன்றை பாடினார். இதை தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். பின்னர், இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவாக அதே பாடலை பாடினார். 
இந்த நிலையில், குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக சீமான் பயன்படுத்தியதாக கூறி அஜேஷ் என்பவர் எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.