tamilnadu

img

கொரோனா வைரஸை விட கொடியது என்பிஆர்: தவ்ஹீத் ஜமாத்

சென்னை, மார்ச் 18- கொரோனா வைரஸை விட கொடியது என்பிஆர் என தவ்`ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஈ.முஹமது தெரி வித்துள்ளார். தமிழ்நாடு தவ்`ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்க ளில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டுமென தமிழக அரசை வலியு றுத்தி சென்னை குறளகம் அருகில் புத னன்று (மார்ச் 18) சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.ஏ. சாகுல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலப் பொருளாளர் பி. அப்துல்ரஹீம் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் முஹம்மது செய்தியாளர்களிடம் கூறுகையில்,தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டினால் பாதிக்கப்படும் தமிழக மக்க ளுக்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், தமிழ கத்தைப் பொருத்தவரையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக போராடும் மக்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நோக்கத்தில் மட்டுமே அரசு செயல்  பட்டு வருகிறது என்றார். மேலும் டெல்லி யில் போராடிய மக்களின் மீது திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு இது வரை எடுக்கவில்லை. அதேபோல பாதிக் கப்பட்டவர்களையும் பிரதமர் மோடி இது வரை நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல மைச்சர் கொரோனா வைரசினால் தமிழ கத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதனால்தான் நாங்கள் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். கொரோனா வைரசை விட கொடியது இந்த என்பிஆர் என தெரிவித்தார்.