tamilnadu

img

நவ. 26 வேலை நிறுத்தத்தை பெற்றி பெறச் செய்வீர்: வைகோ...

சென்னை:
நவம்பர் 26ம் தேதி அனைத்து தொழிற் சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-

பாஜக 2014 இல் மத்திய ஆட்சி பொறுப் புக்கு வந்த பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் 150 ஆண்டுகளாக போராடி வெற்றி பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது.தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து, மீண்டும் முதலாளித்துவ நுகத்தடியில் தொழிலாளர்களை அடிமைப்படுத்திட திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி உள்ளது. இனி நிரந்தரத் தொழிலாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் வேலைக்கு அழைக்கவும் தேவை இல்லை என்றால் வேலையை விட்டு நீக்கவும் இனி முடியும்.

மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிகொடை உள்ளிட்ட தொழிலாளர்க ளின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும்.ரத்தத் துளிகளைத் தாரை வார்த்துக் கொடுத்து, உயிர் பலிகளைத் தந்து உலகத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராடி, எட்டு மணி நேரம் வேலை என்பதைச் சட்டப் பூர்வமாக உறுதி செய்தனர்.ஆனால் இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளை முறியடித்து, உரிமைகளை நிலைநாட்ட இந்திய தொழி சங்கங்கள் நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தருகிறது.தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர் உரிமைகளை நசுக்கி வருவதும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை அளிக்காமல் அலட்சியப்படுத்துவதும் தொடர்கிறது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராமல் கிடப்பில் போட்டுள்ளது.எனவே நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய- மாநில அரசுத் துறைகளின் அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் பேராதரவை வழங்கி வெற்றி பெறச் செய்திட வேண்டும்.தொழிலாளர் நலன் என்பது நாட்டின் நலனோடு பின்னிப் பிணைந்திருப்பதால், தமிழக மக்களும் இப்பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை நல்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.