தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு.
ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என்றால் அதற்கு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் பொருள். வார்த்தை அலங்காரத்துக்காக தான் இருப்பில் உள்ளது என கூறுகிறோம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து இதுவரை அனுப்பப்பட்ட 20 மசோதாக்கல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஸ்டெர்லைட் பற்றி பேசிய ஆளுநர், வெளிநாட்டு அமைப்புகள் சில ஏராளமான பணத்தை கொடுத்து உள்ளூர் மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டது. இந்தியாவில் 40 சதவிகித காப்பர் ஸ்டெர்லைடில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது இதனால் தற்போது கப்பரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. கூடங்குளம் அணு உலை போராட்டத்திற்கும் வெளிநாட்டு நிதியே காரணம் எனவும் சர்ச்சைக்குறிய விதமாக பேசியுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக திமுக கூட்டணி தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
அறிக்கையின் முக்கிய குறிப்புகள் :
`தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர் என்பதை மறந்து பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளத் துடிக்கிறார். அதிலும் குறிப்பாக சனாதனத்துக்கும், வர்ணாசிரம தர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொதுமேடைகளில் எடுத்துவைத்த கருத்துகள் அபத்தமானவை. உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.