சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் (திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) 15 ஆயிரம் பேர் ஷேர் ஆட்டோ தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் 10-15 விழுக்காட்டி னர்தான் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நல வாரிய உறுப்பினர்களில் 8 விழுக்காட்டினர் அளவுக்கே அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைத்துள்ளது. வருவாய் மாவட்ட எல்லைக் குள் ரேசன் கார்டு இருந்தால்தான் நலவாரியத்தில் உறுப்பின ராக முடியும். இதனால், பெரும்பாலான ஷேர் ஆட்டோ ஓட்டு நர்களால் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர முடிய வில்லை. எனவே, பெருநகர சென்னை காவல் எல்லையை அடிப்படையாக கொண்டு நலவாரிய உறுப்பினர் பதிவு செய்ய வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயங்காத காலத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 15ஆயிரம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும். நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் அறிவிப்பு செய்துள் ளது. அதனை பல நிறுவனங்கள் மதிக்கவில்லை. எனவே, ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பை ஆணையாக வெளியிட வேண்டும். மேலும், தவணைத் தொகை செலுத்தாத காலத்திற்கு விதிக்கப் படும் அபராத வட்டியையும் ரத்து செய்ய வேண்டும். தவணை செலுத்தாத காரணத்திற்காக ஆட்டோக்கள் பறி முதல் செய்வதை கைவிட வேண்டும். தகுதிச்சான்றிதழ் (எப்சி), இன்சூரன்ஸ், பர்மிட் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க அபராதம் விதிக்க கூடாது. சுமார் 6 மாத கால அவகாசம் அளித்து இவற்றை புதுப்பித்து தர வேண்டும். -தமிழ்ச்செல்வன் செயல் தலைவர், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம்