tamilnadu

பெஞ்சால் புயலால் உருக்குலைந்த வடமாவட்டங்கள் 8 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழு இன்று ஆய்வு

சென்னை, டிச. 6 - பெஞ்சால் புயலினால் ஏற்பட்டுள்ள  கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களை கருத்தில் கொண்டு, உள்கட்ட மைப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மேலும் வெள்ளச் சேதம் குறித்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவையும் விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 இந்நிலையில், பெஞ்சால் புயல் பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் உள்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழு வெள்ளிக்கிழமை (டிச.6 ) மாலை தமிழகம் வருகிறது. இந்த குழுவினர் சனிக்கிழமை (டிச.7) காலையில், வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட தொடங்குகின்றனர். இவர்கள் புயல் பாதித்த மாவட்டங் களான கடலூர், விணா மலை, கள்ளக்குறிழுப்புரம், திருவண்ச்சி மற்றும் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.