tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் வெயில் சுட்டெரிக்க என்ன காரணம்?

சென்னை, ஜூலை 31 - வட தமிழகத்தில் பொது வாக வறண்ட வானிலை காணப்படுகிறது. சென்னை யில் செவ்வாயன்றும் புத னன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 

செவ்வாய்கிழமை மாலை 5 மணி வரை வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் பாதிக்கப் பட்டனர். அதே போல இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்தி ரம் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் போன்று அனல் வீசியது. காலை 9 மணி  முதல் கொஞ்சம் கொஞ்ச மாக வெயிலின் தாக்கம் அதி கரித்தது. கோடை காலத் தில் உஷ்ணம் இருப்பது போல சென்னைவாசிகள் உணர்ந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். 

இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டி மேகங்கள் சூழ்ந்து மழைப் பொழிவை கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயில்  அதிகமாக இருப்பதற்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணமாகும்.மேகக்கூட்டங்கள் இல்லை.  மேகக்கூட்டங்கள் உருவா கினால் மழைக்கான வாய்ப்பு ஏற்படும். மேகக் கூட்டங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளது. இது இந்த  சீசனில் நடக்கும் வழக்க மான ஒன்றுதான். புதிதல்ல”  என்றார்.

ராயப்பேட்டையில் வாகன நெரிசலை தவிர்க்க காவலர்களை நிறுத்த கோரிக்கை

சென்னை, ஜூலை 31 - ராயப்பேட்டை பகுதி யில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காலை மாலை நேரங்களில் காவலர்களை பயன்படுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மெரினா போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம், கட்சி யின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.ஆறுமுகம், சேப் பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி, பகுதிக்குழு உறுப்பி னர் எஸ்.டி.ராஜேந்திரன் ஆகியோர் மனு அளித்து பேசினர்.

ஐஸ்அவுஸ் சாலை சந்திப்பில் காலை, மாலை  நேரங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.  பள்ளி மாணவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் சென்று வர சிரமமாக உள்ளது.

எனவே, ஐஸ்அவுஸ், மீர்சாகிப்பேட்டை, ராயப் பேட்டை பகுதிகளில் காலை 8-11மணி, மாலை 3-6.30 மணி வரை சாலைகளில் போக்குவரத்து காவலர் களை நிறுத்தி போக்கு வரத்து நெரிசலை சரி செய்ய  வேண்டுமென்று கோரினர்.

ஓட்டல்களில் உணவுபொருட்கள் விலையேறும்

சென்னை,ஜூலை 31 உணவகங்களின் உரிமம் கட்டணத்தை மாநக ராட்சி உயர்த்தியுள்ளதால்  ஓட்டல்களில் உணவு பொரு ட்களின் விலை உயர வாய்ப் புள்ளது.  தேநீர் கடைகள்,  சலூன்களின் உரிமக் கட்டண மும் அதிகரிக்கப்பட்டுள்ள தால் பொதுமக்களின் அன் றாட செயல்பாடுகளுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.