சென்னை மாநகரத்தை கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டு வருகி றது. ஒவ்வொரு நாளும் பாதித்தவர்க ளின் எண்ணிக்கையும், பலி எண் ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. வைரஸ் பர வலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நட வடிக்கைகள் போதிய பலன் அளிக்க வில்லை. இது சுகாதாரத் துறைக்கு பெரும் தலைவலியை கொடுத்து வரு கிறது. மாநகரத்தில் மக்கள்தொகை நெருக்கம் அதிகம் என்பதால் வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரிக்கி றது என்றும் கட்டுக்குள் கொண்டுவரு வது பெரும் சவாலாக இருக்கிறது என்றும் சிறப்பு குழுவும் மருத்துவக் குழு வும் தொடர்ந்து அறிக்கை கொடுத்து வருகிறது.
மாநகரம் முழுவதும் மண்டல வாரி யாக கொரோனா நோய்த்தடுப்பு களப் பணியாளர்களை மாநகராட்சி நிர்வா கம் தினக்கூலி (500 ரூபாய்) ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தது. அந்த பணியாளர்கள் கடந்த மூன்று மாத காலமாக வீதி வீதியாக தினசரி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். தினமும் காலை 8 மணிக்கு பதி வேட்டில் கையெழுத்து இடும் இந்த பணியாளர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுதும் அந்தப் பதி வேட்டில் கையெழுத்திட்டு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்ற னர். இந்த பேரிடர் காலத்தில் மக்கள் சேவையே தங்களின் உயிர் மூச்சு என்று பணியாற்றிவரும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் வரிசையின் இந்தக் களப்பணியாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.
தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியில் தினசரி ஒவ்வொரு வீட்டை யும் சந்திப்பதோடு மட்டுமின்றி இடை யிடையே கபசுர கசாயத்தையும், மக்க ளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரு கின்றனர். களப்பணியாளர்கள் பெரும்பாலானோர் பணியில் சேர்ந்தது முதல் இடையில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தங்கள் பணியை செவ்வனே செய்துவருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு மாநக ராட்சியின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. களப் பணியா ளர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வாங்கிய அதிகாரிகள் பணத்தை வங்கியில் செலுத்தவில்லை. சம்பளம் எப்போது கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளும் தங்கள் அதிகாரிகளிடம் கேட்கும் போதும் இன்று வந்து விடும், நாளை வந்து விடும் என்பது மட்டும் பதிலாக வந்துள்ளது.
ஊதியம் வழங்கப்படாததால் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை பெருமாநகராட்சி கொரோனா நோய் தடுப்பு 68வது வார்டு களப்பணி யாளர்கள் சுமார் 70 பேர் திருவிக நகர் மண்டல அலுவலகம் முன்பு திங்க ளன்று (ஜூன் 1) திரண்டனர். இந்த தகவலை அறிந்த அதிகாரி கள் வழக்கம் போல் இன்னும் இரண்டு தினங்களில் சம்பளம் கிடைத்துவிடும் அனைவரும் வேலைக்கு செல்லுங்கள் என்று சமாதானம் செய்துள்ளனர். ஆனால், கள பணியாளர்கள் பணிக்குச் செல்ல மறுத்து விட்டனர். கள பணிக்கு திரும்பவில்லை என்றால் அனை வரையும் பணிநீக்கம் செய்து விடு வோம் புதிதாக ஆட்களை தேர்வு செய்து கொள்வோம் என்றும் மிரட்டி யுள்ளனர்.
இந்த விவகாரம் காட்டுத்தீ போல் பரவியதால் நோய் தடுப்பு சிறப்பு அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் என்ற பெயரில் 12 ஆயி ரம் முதல் 13 ஆயிரத்து 500 ரூபாய் வரை காசோலையை வழங்கினர். 40 வயதுக்கு மேற்பட்ட களப்பணி யாளர்களை இனி பணிக்கு வர வேண்டாம் என்று கணக்கை முடித்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். களப் பணியாளர்களுக்கு நிலுவை தொகை யும்? மற்றவர்களுக்கு தொடர்ந்து பணி யும் கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாகி உள்ளது. சென்னை மாநகரத்தில் வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் களப்பணியாளர்களை மிரட்டுவது பணியிலிருந்து நீக்கும் அதிகாரி களின் செயல்பாடு கண்மூடித்தன மானதாகும்.