tamilnadu

img

குரங்கம்மை தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: அமைச்சர்

சென்னை, ஆக. 18- ஆப்பிரிக்கா நாடு களில் வேகமாக பர விய குரங்கம்மை நோய் தொற்று, சுவீ டன் நாட்டில் உறுதி யாகியுள்ளது. 

ஏற்கனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை யை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து  வருபவர்களுக்கு விமான நிலையங் களில் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. அறிகுறி ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித் துள்ளார்.