tamilnadu

img

காவல் நிலையங்களில் இரவு விசாரணை கூடாது - டிஜிபி உத்தரவு

விசாரணை கைதிகள் அடுத்தடுத்து மரணமடைந்து வரும் நிலையில் விசாரணை கைதிகளிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக டிஜிபி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் வழக்குகளில் கைது செய்யப்படும் அனைவரையும் மாலை 6 மணிக்குள் சிறைகளில் அடைக்க வேண்டும். கைதிகளிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது. கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் இனி வைத்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.