tamilnadu

img

செயற்கை சுவாசம் வழங்கவில்லை: அமைச்சர்

சென்னை, ஏப்.1- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க ளில் ஒருவ ருக்கு கூட செயற்கை சுவாசம் கொடுக்கும் நிலை ஏற்படவில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை மூத்த மண்டல இயக்குநர் ரோஷினி ஆர்தர் தலைமையிலான குழுவினருடன் சேர்ந்து, ஓமந்தூரார் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஷினி ஆர்தர், சென்னை யில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக பாராட்டினார்.

;