கடலூர், ஜூன் 28- பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நெய்வேலியில் கருத்தரங்கம் நடைபெற்றது. நெய்வேலி என்எல்சி இந்தியா நிறு வனத்தில் பணியாற்றும் இன்கோசர்வ், ஹவுசி கோஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். ஆனால் நிர்வாகம் இதுவரை தொழிலாளர்க ளின் கோரிக்கை களை கண்டுகொள்ளவில்லை. இதனால் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங் கத்திடமும், என்எல்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தனர். மேலும் கடந்த 6ஆம் தேதி சூப்பர் பஜாரில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நெய்வேலி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு அலுவலக வளாகத்தில் தலைவர் சக்கரபாணி தலைமை யில் கருத்தரங்கம் நடைபெற்றது. தொமுச கனக.பழனிவேல், பாட்டாளி தொழிற்சங்கம் முருகவேல், அதொமுச சின்ன ரகுராமன், தொழிலாளர் விடுதலை முன்னணி பால சுப்பிரமணியன், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு நிரந்தர சங்கத் தலைவர் ஏ. வேல்முருகன், தொமுச தலைவர் வீர. ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். கருத்தரங்கில் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில், வருகிற ஜூலை 10-ஆம் தேதி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, என்எல்சி தலைமை அலுவலகத்தில் என்எல்சி தலை வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்ப தென முடிவு எடுக்கப்பட்டது. சிஐடியு பொரு ளாளர் சண்முகம் நன்றி கூறினார்.