tamilnadu

img

நிவர்புயல்: 27 விரைவு ரயில்கள் ரத்து 

நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல், அதி தீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை(நவ.25) புதன்கிழமை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.இந்நிலையில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் 27 விரைவு ரயில்கள் நாளையும் (நவ.26) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 
காரைக்குடி, திருச்சி, மதுரை மற்றும் கோவை பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களின் ரயில்கட்டணத்தொகை திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்கள் ரத்தை நீட்டிப்பது குறித்து புயல் பாதிப்பு நிலவரத்திற்கேற்ப முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 

;