சென்னை,செப்.24- தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு வழக்கில் தகவலின் படி காலை 6.30 மணியிலிருந்து சென்னையில் 10 இடங்கள், நாகர்கோயிலில் ஒரு இடம், புதுக்கோட்டையில் ஒரு இடம் உள்ளிட்ட 12 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது.