tamilnadu

செய்தித் துளிகள்

3 காவலர்களுக்கு கொரோனா

சென்னையில் சிறப்பு காவல்படை காவலர்கள் 2 பேருக்கும், அயனாவ ரம் பனந்தோப்பு காலனியில் ரயில்வே காவலர் ஒருவருக்கும் கொரோனா  தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் 3  பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முககவசம் இல்லையேல் அபராதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 18ஆம் தேதி முதல் பொதுமக்கள் முகக்  கவசம் இல்லாமல் சாலையில் சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்ப டும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தி.மலை: 7 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 147 பேரில் 134 பேர் தற்சமயம் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை: மண்டல வாரியாக

சென்னையில் 5 ஆயித்து 946 பேர் (மே 15 நிலவரப்படி)கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 71 பேர் குணமடைந்துள்ளனர். 48 பேர்  இறந்துள்ளனர். 4 ஆயிரத்து 801 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட வர்களில் 60.93 விழுக்காட்டினர் ஆண்கள், 39.04 விழுக்காட்டினர் பெண்கள்  ஆவர்.  குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 47 பேரும், கோடம்  பாக்கம் மண்லத்தில் 919 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 737 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 640 பேரும், அண்ணாநகர் மண்ட லத்தில் 493 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 483 பேரும், தண்டை யார் பேட்டை மண்டலத்தில் 474 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 332பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சனிக்கிழமையன்று (மே 16) முற்பகல் வரை 491  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்  னையை சேர்ந்தவர்கள் 332 பேர். இதன்மூலம் சென்னையில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 828 ஆக  அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது ராஜஸ்தான் மாநிலத்தில்  (4747) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகம்.

ரூ.5.76 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக 4 லட்சத்து 51  ஆயிரத்து 564 வழக்குகள் பதியப்பட்டு 4 ல்ட்சத்து 78 ஆயிரத்து 737 பேர்  கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து  3 லட்சத்து 94 ஆயிரத்து  381 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக 5 கோடியே  75 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலை. உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: 12 பேருக்கு தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று (மே 16) 12 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் 462 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர்  இறந்துள்ளனர். 389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் 

கடலூர் நகரில் தங்கியிருந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராள மான தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். சொந்த மாநிலம் செல்ல முடியாமல்  அவதிப்பட்டு வந்தனர். இவர்களில் 120 பேர் பேருந்து மூலம் பீகார் மாநி லத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அதிகரிப்பு

சென்னையில் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701 இடங்களாக உயர்ந்துள்ளது. அதிகபட்ச மாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 119 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு  கண்காணிக்கப்படுகிறது.

சென்னை: ஒருவர் உயிரிழப்பு

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்  காக சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் உயிரிழந்தார். 10 வகுப்பு  படிக்கு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.