tamilnadu

செய்தித் துளிகள்

நாராயணசாமி கண்டனம்
யூனியன் பிரதேசங்களின் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து சட்டம் இயற்றிய பிறகே தனியாரிடம் ஒப்படைக்க முடியும். மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மூலம் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை: இன்று மதுக்கடைகள் திறப்பு
புதுச்சேரியில் செவ்வாய் கிழமையிலிருந்து (மே 19)  மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மீனவர்கள் மீட்பு
கடலூர் அருகிலுள்ள தாழங்குடாவைச் சேர்ந்த அன்பழகன் (28), சசி (22), மாறன் (26) ஆகியோர் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச்  சென்றனர். மீன்பிடித்து விட்டு கடலூர் துறைமுகம் நோக்கித் திரும்பிய  போது கடலில் ஏற்பட்ட கடும் சீற்றம் காரணமாக முகத்துவாரம் பகுதியில்  படகு கவிழ்ந்தது. இதனையடுத்து, 3 மீனவர்களும் கடலில் விழுந்த தோடு, அவர்கள் பிடித்து வந்த மீன் மற்றும் மற்ற பொருட்களும் சேதம டைந்தது. இதனையடுத்து மீனவர்கள் கவிழ்ந்த படகினை பிடித்துக்  கொண்டு உயிருக்குப் போராடினர். இந்த தகவலறிந்த சக மீனவர்கள்  மற்றும் கடலோர காவல்படை குழுமத்தினர் சம்பவ இடத்திற்குச்சென்று தத்தளித்த 3 மீனவர்களையும் மீட்டனர்.